<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Pirapalam.com</title>
	<atom:link href="http://pirapalam.com/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>http://pirapalam.com</link>
	<description>Top celebrity site for Tamils​​!</description>
	<lastBuildDate>Sat, 19 May 2012 11:39:01 +0000</lastBuildDate>
	<language>en</language>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
	<generator>http://wordpress.org/?v=3.3.2</generator>
		<item>
		<title>ஸ்ரீதேவியைப் பிடிக்கும்&#8230; ஆனால் அவரைப் போல திருமணமானவரை மணக்க இஷ்டமில்லை! &#8211; சமந்தா</title>
		<link>http://pirapalam.com/cinema/3893.html</link>
		<comments>http://pirapalam.com/cinema/3893.html#comments</comments>
		<pubDate>Sat, 19 May 2012 11:39:01 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
				<category><![CDATA[நடிகை]]></category>

		<guid isPermaLink="false">http://pirapalam.com/?p=3893</guid>
		<description><![CDATA[எனக்குப் பிடித்த நடிகை ஸ்ரீதேவிதான். ஆனால் அவரைப் போல ஏற்கெனவே திருமணமான ஒருவரை மணப்பதில் எனக்கு இஷ்டமில்லை, என்று கூறியுள்ளார் நடிகை சமந்தா.
தமிழில் பெரிய வெற்றிப் படம் எதிலும் தனி கதாநாயகியாக நடிக்காமலேயே முன்னணி நாயகியாக உள்ளவர் சமந்தா.
நீதானே என் பொன் வசந்தம், கடல் என எதிர்ப்பார்ப்புக்குரிய படங்களில்&#8230;]]></description>
			<content:encoded><![CDATA[<p>எனக்குப் பிடித்த நடிகை ஸ்ரீதேவிதான். ஆனால் அவரைப் போல ஏற்கெனவே திருமணமான ஒருவரை மணப்பதில் எனக்கு இஷ்டமில்லை, என்று கூறியுள்ளார் நடிகை சமந்தா.<span id="more-3893"></span></p>
<p>தமிழில் பெரிய வெற்றிப் படம் எதிலும் தனி கதாநாயகியாக நடிக்காமலேயே முன்னணி நாயகியாக உள்ளவர் சமந்தா.</p>
<p>நீதானே என் பொன் வசந்தம், கடல் என எதிர்ப்பார்ப்புக்குரிய படங்களில் இவர் நாயகியாக நடித்து வருகிறார்.</p>
<p>தனது இந்த வளர்ச்சி குறித்து சமந்தா கூறுகையில், &#8220;எனக்கு பழைய நடிகை ஸ்ரீதேவியைப் பிடிக்கும். சினிமாவில் அவரை முன் மாதிரியாகக் கொண்டு நடிக்கிறேன். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தென் இந்திய மொழி படங்களில் நம்பர் ஒன் கதாநாயகியாக வளர்ந்தார். இந்தி திரையுலகுக்கு போய் அங்கேயும் தன்னை திரையுலக மகாராணியாக நிரூபித்தார். என் நடிப்புக்கு அவர்தான் ரோல்மாடல்.</p>
<p>தமிழ், தெலுங்கு படங்களில் நடித்த நான் ஸ்ரீதேவியை போல் இப்போது இந்திக்கு போய் உள்ளேன். எல்லா விஷயங்களிலும் ஸ்ரீதேவியைப் பின் பற்றும் நான் திருமண விஷயத்தில் மட்டும் அவரைப் பின்பற்ற மாட்டேன். ஸ்ரீதேவியை போல் ஏற்கனவே திருமணமான ஒருவரை மணக்கமாட்டேன்,&#8221; என்றார்.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://pirapalam.com/cinema/3893.html/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>விஜய் &#8211; அஜீத்தை வைத்து நினைத்தாலே இனிக்கும் ரிமேக்கா?</title>
		<link>http://pirapalam.com/cinema/3890.html</link>
		<comments>http://pirapalam.com/cinema/3890.html#comments</comments>
		<pubDate>Sat, 19 May 2012 11:37:45 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
				<category><![CDATA[கிசுகிசு]]></category>

		<guid isPermaLink="false">http://pirapalam.com/?p=3890</guid>
		<description><![CDATA[ரஜினி &#8211; கமல் நடித்த சூப்பர் ஹிட் படமான கே பாலச்சந்தரின் நினைத்தாலே இனிக்கும் படத்தை இயக்குநர் செல்வா ரீமேக் செய்யப் போவதாகவும், அதில் விஜய்யும் அஜீத்தும் நடிக்கவிருப்பதாகவும் செய்திகள் வெளியாகின.
ரஜினி, கமல் திரையுலக வரலாற்றில் ஒரு மியூசிகல் ஹிட்டாக அமைந்தது இந்த நினைத்தாலே இனிக்கும். கதாநாயகியாக ஜெயப்&#8230;]]></description>
			<content:encoded><![CDATA[<p>ரஜினி &#8211; கமல் நடித்த சூப்பர் ஹிட் படமான கே பாலச்சந்தரின் நினைத்தாலே இனிக்கும் படத்தை இயக்குநர் செல்வா ரீமேக் செய்யப் போவதாகவும், அதில் விஜய்யும் அஜீத்தும் நடிக்கவிருப்பதாகவும் செய்திகள் வெளியாகின.<span id="more-3890"></span></p>
<p>ரஜினி, கமல் திரையுலக வரலாற்றில் ஒரு மியூசிகல் ஹிட்டாக அமைந்தது இந்த நினைத்தாலே இனிக்கும். கதாநாயகியாக ஜெயப் பிரதா நடித்தார். எம்எஸ் விஸ்வநாதன் இசையில் அத்தனைப் பாடல்களும் காலத்தை வென்று இன்றும் இனிமையாக ஒலிக்கின்றன.</p>
<p>இந்தப் படத்தை ரீமேக் செய்ய முயற்சிகள் நடப்பதாக தகவல்கள் வெளியாகின. இதில் விஜய், அஜித் ஆகியோர் இணைந்து நடிக்க பேச்சுவார்த்தை நடப்பதாகவும் கூறப்பட்டது.</p>
<p>நினைத்தாலே இனிக்கும் ரீமேக்கை செல்வா இயக்க உள்ளதாகவும் செய்தி பரவியது. செல்வா ஏற்கனவே அமராவதி படம் மூலம் அஜித்தை அறிமுகம் செய்தவர். ஜெமினி கணேசனின் நான் அவனில்லை படத்தை ரீமேக் செய்து வெளியிட்டார். அப்படம் வெற்றிகரமாக ஓடியது.</p>
<p>இதையடுத்து நினைத்தாலே இனிக்கும் படத்தையும் அவர் ரீமேக் செய்ய உள்ளதாகவும் அஜித்தையும் விஜய்யையும் சந்தித்து இது குறித்து பேசி உள்ளதாகவும் வதந்திகள் பரவின.</p>
<p>ஆனால் செல்வா இந்த செய்திகளை மறுத்துள்ளார்.</p>
<p>அவர் கூறுகையில், &#8220;நினைத்தாலே இனிக்கும் படத்தை ரீமேக் செய்யும் திட்டமில்லை. அப்படி நான் நினைத்திருந்தால்தானே விஜய், அஜித்திடம் பேச&#8230; அந்தப் படம் ஒரு க்ளாஸிக். அதை ரீமேக் செய்வது சரியாக இருக்காது,&#8221; என்றார்.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://pirapalam.com/cinema/3890.html/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>சேட்டை படப்பிடிப்புக்கு சூர்யா திடீர் வருகை!</title>
		<link>http://pirapalam.com/cinema/3887.html</link>
		<comments>http://pirapalam.com/cinema/3887.html#comments</comments>
		<pubDate>Sat, 19 May 2012 11:35:47 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://pirapalam.com/?p=3887</guid>
		<description><![CDATA[டெல்லி பெல்லி படம் தமிழில் சேட்டை என்ற பெயரில் தயாராகிறது. ஆர் கண்ணன் இயக்கும் இந்தப் படத்தில் ஆர்யா, சந்தானம், பிரேம்ஜி, அஞ்சலி நடிக்கின்றனர்.
கடந்த வாரம் சென்னை பின்னி மில்லில் இதன் படப்பிடிப்பு தொடங்கியது. விறுவிறுப்பாக நடந்து வரும் இந்தப் படப்பிடிப்புக்கு திடீர் வருகை தந்து படக்குழுவினருக்கு இன்ப&#8230;]]></description>
			<content:encoded><![CDATA[<p>டெல்லி பெல்லி படம் தமிழில் சேட்டை என்ற பெயரில் தயாராகிறது. ஆர் கண்ணன் இயக்கும் இந்தப் படத்தில் ஆர்யா, சந்தானம், பிரேம்ஜி, அஞ்சலி நடிக்கின்றனர்.</p>
<p><span id="more-3887"></span>கடந்த வாரம் சென்னை பின்னி மில்லில் இதன் படப்பிடிப்பு தொடங்கியது. விறுவிறுப்பாக நடந்து வரும் இந்தப் படப்பிடிப்புக்கு திடீர் வருகை தந்து படக்குழுவினருக்கு இன்ப அதிர்ச்சி தந்தார் நடிகர் சூர்யா.</p>
<p>&nbsp;</p>
<p>வந்ததோடு மட்டுமல்லாமல், படத்தின் நட்சத்திரங்கள் ஆர்யா, சந்தானம் உள்ளிட்டோருடன் ஜாலியாகப் பேசிக்கொண்டிருந்தார். படத்தின் கதை மற்றும் ஷூட்டிங் நடக்கும் விதம் பற்றியெல்லாம் கேட்டறிந்தவர், அப்படியே பக்கத்தில் நடக்கும் மாற்றான் படப்பிடிப்புத் தளத்துக்கு சேட்டை குழுவினரை அழைத்துச் சென்று தனது குழுவினருக்கு அறிமுகம் செய்து வைத்தார்.</p>
<p>சூர்யாவின் திடீர் வருகையும், அவர் தங்களிடம் நடந்து கொண்ட விதமும் உற்சாகமளிப்பதாகவும், புதிய அனுபவத்தைத் தருவதாகவும் இருந்தது என இயக்குநர் கண்ணன் தெரிவித்தார்.</p>
<p>சூர்யா எனக்குப் பிடித்த நடிகர்களுள் ஒருவர். அவர் வந்து என்னை வாழ்த்தியது மிகுந்த சந்தோஷத்தை அளித்தது என்றார் ஹீரோ ஆர்யா.</p>
<p>படத்தின் தயாரிப்பாளர் தனஞ்செயன் கூறுகையில், &#8220;சூர்யா எங்களுடன் வெகுநேரம் அமர்ந்து சேட்டை படம் வளரும் விதம் குறித்துப் பேசினார். ஒரு பெரிய நடிகர், எங்கள் மீது அக்கறையாக வந்து பேசியது மகிழ்ச்சியாக இருந்தது,&#8221; என்றார்.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://pirapalam.com/cinema/3887.html/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>வேண்டாம் அசின்! &#8211; ஷங்கருக்கு கோரிக்கை</title>
		<link>http://pirapalam.com/cinema/3884.html</link>
		<comments>http://pirapalam.com/cinema/3884.html#comments</comments>
		<pubDate>Sat, 19 May 2012 11:34:08 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://pirapalam.com/?p=3884</guid>
		<description><![CDATA[இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன் விருந்து சாப்பிட்ட அசினை தன் படத்தில் ஷங்கர் நடிக்க வைக்கக் கூடாது என்று கோரிக்கை விடப்பட்டுள்ளது.
இலங்கைக்கு எந்த நடிகர் நடிகையும் செல்லக் கூடாது என்ற தடையை மீறி இலங்கை சென்ற நடிகை அசின், ரெடி படப்பிடிப்பில் பங்கேற்றார். அங்கு ராஜபக்சேவுடன் விருந்து சாப்பிட்டார்.
இதனால் அவருக்கு&#8230;]]></description>
			<content:encoded><![CDATA[<p>இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன் விருந்து சாப்பிட்ட அசினை தன் படத்தில் ஷங்கர் நடிக்க வைக்கக் கூடாது என்று கோரிக்கை விடப்பட்டுள்ளது.<span id="more-3884"></span></p>
<p>இலங்கைக்கு எந்த நடிகர் நடிகையும் செல்லக் கூடாது என்ற தடையை மீறி இலங்கை சென்ற நடிகை அசின், ரெடி படப்பிடிப்பில் பங்கேற்றார். அங்கு ராஜபக்சேவுடன் விருந்து சாப்பிட்டார்.</p>
<p>இதனால் அவருக்கு தமிழகத்தில் எதிர்ப்புகள் கிளம்பின. ஆனால் அதைக் கண்டு கொள்ளவில்லை அசின். சினிமா உலகினரும் இதெல்லாம் சகஜம் என்று மறந்துவிட்டனர்.</p>
<p>அதற்குப் பிறகு தமிழில் விஜய்க்கு ஜோடியாக அசின் நடித்த காவலன் படம் கூட வெளியாகிவிட்டது.</p>
<p>இந்த நிலையில் ஷங்கர் இயக்கப் போகும் புதுப்படத்தில் விக்ரம் ஜோடியாக நடிக்க அசின் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p>
<p>இதற்கு இந்து மக்கள் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அக்கட்சியின் மாநில செயலாளர் பி.ஆர்.குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், &#8220;இலங்கையில் ராஜபக்சே அரசு ஈழத் தமிழர்களை ஈவு இரக்கமின்றி கொன்று குவித்தது. அதன் மூன்றாம் ஆண்டு துக்க தினத்தை உலக தமிழர்கள் இப்போது கடை பிடிக்கின்றனர்.ராஜபக்சே மீது போர்க்குற்ற விசாரணை நடத்த வேண்டும் என்ற குரல்கள் ஒலித்து வருகின்றன.</p>
<p>இந்த நிலையில் தமிழர் உணர்வுகளுக்கு எதிராக நடந்து கொண்ட அசினை தனது புதுப்படத்தில் நடிக்க வைக்க இயக்குனர் ஷங்கர் முடிவெடுத்திருப்பதாக வெளியான தகவல் தமிழர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி யுள்ளது. திரையுலகினரின் தடையை மீறி அசின் இலங்கை சென்றது மட்டு மின்றி ராஜபக்சேயுடன் விருந்தும் சாப்பிட்டார்.</p>
<p>ஒன்றரை லட்சம் தமிழர்களை கொன்றவர்களோடு கைகுலுக்கி விட்டு வந்த அசினை படத்தில் ஷங்கர் நடிக்க வைக்கக்கூடாது. மீறி நடிக்க வைத்தால் ஷங்கர் வீட்டு முன் முற்றுகை போராட்டம் நடத்துவோம்,&#8221; என்று குறிப்பிடப்பட்டுள்ளது.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://pirapalam.com/cinema/3884.html/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>ஜூன் 8-ம் தேதி பில்லா -2?</title>
		<link>http://pirapalam.com/cinema/3880.html</link>
		<comments>http://pirapalam.com/cinema/3880.html#comments</comments>
		<pubDate>Fri, 18 May 2012 12:28:14 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://pirapalam.com/?p=3880</guid>
		<description><![CDATA[ஏகப்பட்ட பில்ட் அப் கொடுக்கப்பட்டு வரும் அஜீத்தின் பில்லா 2 படம் ஜூன் முதல் வாரத்தில் வெளியாகும் என்று முதல் தகவல் கசியவிடப்பட்டுள்ளது.
சக்ரி டோலெட்டி இயக்கத்தில் உருவாகியுள்ள பில்லா 2 படம் முன்பே முடிந்து, விற்பனையும் நடந்துவிட்டது. மொத்தம் ரூ 40 கோடிக்கு விற்றுள்ளது இந்தப் படம்.
இன் என்டர்டெயின்மென்ட்&#8230;]]></description>
			<content:encoded><![CDATA[<p>ஏகப்பட்ட பில்ட் அப் கொடுக்கப்பட்டு வரும் அஜீத்தின் பில்லா 2 படம் ஜூன் முதல் வாரத்தில் வெளியாகும் என்று முதல் தகவல் கசியவிடப்பட்டுள்ளது.<span id="more-3880"></span></p>
<p>சக்ரி டோலெட்டி இயக்கத்தில் உருவாகியுள்ள பில்லா 2 படம் முன்பே முடிந்து, விற்பனையும் நடந்துவிட்டது. மொத்தம் ரூ 40 கோடிக்கு விற்றுள்ளது இந்தப் படம்.</p>
<p>இன் என்டர்டெயின்மென்ட் சார்பில் சுனில் கேட்டர்பால் தயாரித்துள்ள பில்லா 2 -ன் விநியோக உரிமையை ஆஸ்கர் ரவிச்சந்திரன் பெற்றுள்ளார்.</p>
<p>மே முதல் தேதி இந்தப் படத்தின் பாடல்கள் வெளியாகின. ஆனால் பெரிய அளவு ஹிட்டான மாதிரி தெரியவில்லை. ஒருவேளை படம் வந்த பிறகு பாடல்கள் பிரபலமாகலாம்.</p>
<p>அடுத்து பில்லா 2 படத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவிக்க உள்ளனர். வரும் ஜூன் 8-ம் தேதி படம் வெளியாகும் என தங்களுக்கு தகவல் சொல்லப்பட்டுள்ளதாக பில்லா 2 விநியோகஸ்தர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.</p>
<p>அதற்கு முன் படத்தின் இரண்டாவது ட்ரைலர் வெளியாகும் என்றும், அடுத்தவாரம் படத்தின் சென்சார் முடிந்ததும் வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://pirapalam.com/cinema/3880.html/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>&#8216;சார் ஒஸ்தாரா&#8217;&#8230; அமலா பாலைத் தொடர்ந்து த்ரிஷாவும் விலகல்!</title>
		<link>http://pirapalam.com/cinema/3876.html</link>
		<comments>http://pirapalam.com/cinema/3876.html#comments</comments>
		<pubDate>Fri, 18 May 2012 12:23:57 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://pirapalam.com/?p=3876</guid>
		<description><![CDATA[தெலுங்கில் ரவி தேஜா நடிக்கும் புதிய படமான சார் ஒஸ்தாரா, திடீர் பரபரப்புக்குள்ளாகியுள்ளது. காரணம் அந்தப் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்ட இரு முன்னணி நடிகைகள் திடீரென அடுத்தடுத்து விலகிக் கொண்டதுதான்.
‘சார் ஒஸ்தாரா’ படத்தில் இரு கதாநாயகிகள். ஒருவர் அமலா பால். தமிழில் நல்ல வாய்ப்பு வந்துள்ளதாலும், கால்ஷீட்&#8230;]]></description>
			<content:encoded><![CDATA[<p>தெலுங்கில் ரவி தேஜா நடிக்கும் புதிய படமான சார் ஒஸ்தாரா, திடீர் பரபரப்புக்குள்ளாகியுள்ளது. காரணம் அந்தப் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்ட இரு முன்னணி நடிகைகள் திடீரென அடுத்தடுத்து விலகிக் கொண்டதுதான்.<span id="more-3876"></span></p>
<p>‘சார் ஒஸ்தாரா’ படத்தில் இரு கதாநாயகிகள். ஒருவர் அமலா பால். தமிழில் நல்ல வாய்ப்பு வந்துள்ளதாலும், கால்ஷீட் தர முடியாததாலும் இந்தப் படத்திலிருந்து விலகுவதாக முதலில் அவர் அறிவித்திருந்தார்.</p>
<p>படத்தின் பிரதான கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தவர் திரிஷா. ரவி தேஜாவே விரும்பி இவரை சிபாரிசு செய்ததால் இயக்குநர் பரசுராம் ஒப்பந்தம் செய்தாராம்.</p>
<p>ஆனால் திரிஷா தற்போது திடீரென்று அப்படத்தில் நடிக்க முடியாது என கூறி விலகிவிட்டார். இது தெலுங்கு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ரவி தேஜாவும் அதிர்ச்சிக்குள்ளாகிவிட்டாராம்.</p>
<p>இதுகுறித்து திரிஷா கூறுகையில், &#8220;ஏற்கனவே சில பெரிய பட்ஜெட் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளளேன்.</p>
<p>அப்படங்களுக்கு ஒதுக்கிய தேதிகளில் ‘சார் ஒஸ்தாரா’ படத்தில் நடிக்க கேட்டனர். அது முடியாது என்பதால் படத்தில் இருந்து விலகிவிட்டேன்,&#8221; என்றார்.</p>
<p>ரவிதேஜா படத்தில் ரொம்பவும் கவர்ச்சியாக நடிக்க வேண்டியிருந்ததால்தான் த்ரிஷா விலகிக் கொண்டதாகக் கூறப்படுகிறது.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://pirapalam.com/cinema/3876.html/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>ராட்டினம் &#8211; திரைப்பட விமர்சனம்</title>
		<link>http://pirapalam.com/cinema/3872.html</link>
		<comments>http://pirapalam.com/cinema/3872.html#comments</comments>
		<pubDate>Fri, 18 May 2012 11:25:55 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
				<category><![CDATA[திரைவிமர்சனம்]]></category>

		<guid isPermaLink="false">http://pirapalam.com/?p=3872</guid>
		<description><![CDATA[தமிழ் சினிமாவில் எப்போதாவது ஒரு முறைதான் சினிமா அல்லாத ஒரு வாழ்க்கையை திரையில் பார்த்து, அந்த மனிதர்களோடே நாமும் பயணிக்க முடியும். அப்படிப்பட்ட அழகான, அரிதான சினிமாக்களில் ஒன்று ராட்டினம்.

நாம் பார்த்த அல்லது அனுபவித்த வலியை, அந்தத் தன்மை மாறாமல் திரையில் மீண்டும் பார்க்கும்போது மனசெல்லாம் இனம்புரியாத உணர்வு&#8230;]]></description>
			<content:encoded><![CDATA[<p>தமிழ் சினிமாவில் எப்போதாவது ஒரு முறைதான் சினிமா அல்லாத ஒரு வாழ்க்கையை திரையில் பார்த்து, அந்த மனிதர்களோடே நாமும் பயணிக்க முடியும். அப்படிப்பட்ட அழகான, அரிதான சினிமாக்களில் ஒன்று ராட்டினம்.<br />
<span id="more-3872"></span><br />
நாம் பார்த்த அல்லது அனுபவித்த வலியை, அந்தத் தன்மை மாறாமல் திரையில் மீண்டும் பார்க்கும்போது மனசெல்லாம் இனம்புரியாத உணர்வு ஆக்கிரமித்து நிற்கிறது.</p>
<p>எளிமையான கதை, நேர்மையான காட்சியமைப்பு, எந்த இடத்திலும் சினிமாத்தனமில்லாத இயல்பு&#8230;இவைதான் ராட்டினத்தின் சிறப்புகள்.</p>
<p>தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளை இதற்கு முன் வேறு எந்தப் படத்திலும் இத்தனை சிறப்பாக கதைக்களமாக்கியதில்லை என்பதற்காகவே இயக்குநர் தங்கசாமியைப் பாராட்ட வேண்டும்.</p>
<p>பள்ளி முடித்த ஜெயத்துக்கும் (லகுபரன்) பள்ளியில் படிக்கும் தனத்துக்கும் (ஸ்வாதி) காதல். ஜெயத்தின் அண்ணன் வளரும் இளம் அரசியல்வாதி. அண்ணி லோக்கல் கவுன்சிலர். தனத்தின் அப்பா தூத்துக்குடி துறைமுகத்தின் சேர்மன். தாய் மாமா பெரிய &#8216;க்ரிமினல்&#8217;&#8230; லாயர். அரசியல் தொடர்புகள் எக்கச்சக்கம்!</p>
<p>காதலர்கள் இருவரும் அன்பையும் பரிசுகளையும் பரிமாறிக்கொள்வதோடு நில்லாமல், ஒரு முறை திருச்செந்தூர் வரை ஜாலியாக பைக்கில் போகிறார்கள். வரும்போது ஆத்தூர் பாலத்தில் போலீஸ் மடக்கி விசாரிக்கிறது. அதோடு நில்லாமல் பெண்ணின் வீட்டில் போட்டுக் கொடுத்துவிடுகிறார் இன்ஸ்பெக்டர்.</p>
<p>பிரச்சினையை பக்குவமாகக் கையாள நினைக்கும் பெண்வீட்டுத் தரப்பு, நேராக ஜெயம் வீட்டுக்கு வந்து விஷயத்தைச் சொல்லி கண்டித்து வைக்கச் சொல்கிறார்கள். பெண்ணை கொஞ்ச நாள் வெளியூருக்கு அழைத்துப் போய் வைத்திருந்து, மீண்டும் வருகிறார்கள். ஆனால் காதலர்கள் மீண்டும் சந்திக்கிறார்கள். தனத்தின் அண்ணன் பார்த்துவிட பிரச்சினை வெடிக்கிறது.</p>
<p>பெற்றோரின் வெறுப்பு தாங்காமல் வீட்டைவிட்டு வெளியேறும் தனம், தன்னை அழைத்துப் போய் திருமணம் செய்து கொள்ள வற்புறுத்துகிறாள். குலசை தசரா விழாவில் வைத்து தாலி கட்டுகிறான் ஜெயம்.</p>
<p>அதற்குள் விஷயத்தை இருவீட்டாரும் அரசியலாக்கிவிடுகிறார்கள். ஜெயத்தின் அண்ணன் அசோக்கை, கட்சியின் அண்ணாச்சி அழைத்து எச்சரிக்க, பதிலுக்கு இவரும் கையை உயர்த்த, அது அசோக் கொலையில் முடிகிறது.</p>
<p>விஷயம் கேள்விப்பட்டு கதறிக்கொண்டு புது மனையியுடன் வீடு திரும்புகிறான் ஜெயம். அங்கே விதவை அண்ணி வெறுப்பை உமிழ, இன்னொரு பக்கம் காத்திருக்கும் தனத்தின் வீட்டினர், அவளை தரதரவென இழுத்துப் போகிறார்கள்.</p>
<p>ஜெயம் கட்டிய தாலி என்ன ஆனது? என்பது க்ளைமாக்ஸ்!</p>
<p>ஜெயம் &#8211; தனம் திருமணம், அசோக் கொலை போன்ற சில காட்சிகள், திருப்பங்களை யூகிக்க முடிந்தாலும் எந்தக் காட்சியிலும், &#8216;அட இது சினிமாத்தனமா இருக்கே&#8217; என்று சொல்ல முடியாததுதான் இந்தப் படத்தின் மிகப் பெரிய ப்ளஸ்.</p>
<p>லகுபரன், ஸ்வாதி இருவருக்குமே இது முதல் படம் என்றாலும் நம்ப முடியாத அளவு இயல்பாக நடித்திருக்கிறார்கள். ஒரு இம்மி கூட மிகைப்படுத்தல் இல்லாத காதலையும் சோகத்தையும் திரையில் பார்ப்பது, நம்மை நாமே பார்த்துக் கொள்வதைப் போல புதிதாக உள்ளது.</p>
<p>தனத்தின் பெற்றோர், அந்த கிரிமினல் லாயர், அரசியல் அண்ணாச்சி, ஜெயத்தின் அண்ணி, குறிப்பாக அண்ணன் வேடத்தில் அசத்தியிருக்கும் தங்கசாமி என அனைவருமே நிஜ பாத்திரங்களாகவே வாழ்ந்துள்ளனர்.</p>
<p>கதை புதிதில்லை&#8230; &#8216;காதல்&#8217; போன்ற படங்களில் பார்த்ததுதான் என்றாலும், தினம் இப்படி ஒரு கதை, சம்பவங்கள் நடந்து கொண்டுதானே உள்ளன. அப்படிப் பார்த்தால் ஆணுக்கும் பெண்ணுக்குமான காதல் என்பதே கூட திரும்பத் திரும்ப அரங்கேறிய நாடகம்தானே!</p>
<p>படத்தின் முக்கிய பலம் க்ளைமாக்ஸ். ஆனால் இன்னொரு பக்கம் இது சர்ச்சைக்குரியதும் கூட. பள்ளி வயதில் வரும் எல்லா காதலுமே மாறுதலுக்குட்பட்டது என்று சொல்ல முடியாதே. அந்தக் காதலின் தொடர்ச்சி அடுத்தக் கட்டத்துக்குப் போய், வாழ்க்கையில் இணைந்தவர்களை என்னவென்பது!</p>
<p>ராஜ் சுந்தரின் ஒளிப்பதிவு, மனு ரமேசனின் இசை என தொழில்நுட்ப ரீதியாகவும் இந்தப் படம் சோடை போகவில்லை. பின்னணி இசையில் மண்ணும் மனிதர்களின் மனமும் தெரிகிறது.</p>
<p>புதிய இயக்குநர்களில் தங்கசாமி நம்பிக்கை தரும் படைப்பாளியாகத் தெரிகிறார். வாழ்த்துகள்!</p>
<p><strong>நடிப்பு:</strong> லகுபரன், ஸ்வாதி, தங்கசாமி, எலிசபெத்</p>
<p><strong>ஒளிப்பதிவு:</strong> ராஜ் சுந்தர்</p>
<p><strong>இசை:</strong> மனு ரமேசன்<br />
<strong><br />
பிஆர்ஓ:</strong> நிகில்</p>
<p><strong>தயாரிப்பு:</strong> ஜே மகாலட்சுமி<br />
<strong><br />
எழுத்து &#8211; இயக்கம்:</strong> கே எஸ் தங்கசாமி</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://pirapalam.com/cinema/3872.html/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>ராட்டினம் &#8211; இன்னும் ஒரு இயல்பான சினிமா!</title>
		<link>http://pirapalam.com/cinema/3869.html</link>
		<comments>http://pirapalam.com/cinema/3869.html#comments</comments>
		<pubDate>Thu, 17 May 2012 13:07:13 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://pirapalam.com/?p=3869</guid>
		<description><![CDATA[எந்தவித எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் சாதாரணமாக வெளியாகும் சில படங்கள், அப்படியே பார்ப்பவர் மனதைக் கட்டிப்போடும்.
சமீபத்தில் இந்த மாயத்தை நிகழ்த்திய படம் வழக்கு எண் 18/9. அடுத்து ராட்டினம்!
வெகு இயல்பான இந்தப் படத்தை எஸ் தங்கசாமி என்ற புதியவர் இயக்கியுள்ளார்.
கத்தி, ரத்தம், தாமிரபரணிக் கரையோர கொலைகள் என வன்முறை பூமியாக&#8230;]]></description>
			<content:encoded><![CDATA[<p>எந்தவித எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் சாதாரணமாக வெளியாகும் சில படங்கள், அப்படியே பார்ப்பவர் மனதைக் கட்டிப்போடும்.<span id="more-3869"></span></p>
<p>சமீபத்தில் இந்த மாயத்தை நிகழ்த்திய படம் வழக்கு எண் 18/9. அடுத்து ராட்டினம்!</p>
<p>வெகு இயல்பான இந்தப் படத்தை எஸ் தங்கசாமி என்ற புதியவர் இயக்கியுள்ளார்.</p>
<p>கத்தி, ரத்தம், தாமிரபரணிக் கரையோர கொலைகள் என வன்முறை பூமியாக மட்டுமே காட்டப்பட்டு வந்த தூத்துக்குடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளை, இத்தனை இயல்பாகவும் அழகாகவும் காட்டிய படம் என்றால் அது ராட்டினம்தான்.</p>
<p>இயக்குநர் மட்டுமல்ல, நடிகர் நடிகைகள், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர் என எல்லோருமே இந்தப் படத்தில் புதுசுதான்.</p>
<p>ஆனால் அப்படியொரு சுவடே தெரியாத அளவுக்கு மிக இயல்பாக இந்தப் படம் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.</p>
<p>படம் குறித்து இயக்குநர் தங்கசாமி நம்மிடம் கூறுகையில், &#8220;நான் இதற்கு முன் கனகு, நவீன் முத்துராமன் ஆகியோரிடம் பணியாற்றியுள்ளேன். கடைசியாக மார்கழி 16 படத்தில் பணியாற்றினேன்.</p>
<p>மனித மனம் விசித்திரமானது. ஒரு நேரத்தில் இருக்கும் மனநிலை உறுதியாக உள்ளது போல தெரிந்தாலும், நேரத்துக்கேற்ப அது மாறிவிடும். ஒரு ராட்டினம் போல மேலே போய் கீழே வந்து சுற்றிக் கொண்டே இருக்கும் இயல்புடையதுதான் மனசு, என்பதை தூத்துக்குடி வட்டாரப் பின்னணியில் கூறியுள்ளேன்,&#8221; என்றார்.</p>
<p>நாளை வெளியாகவிருக்கும் ராட்டினம் படத்தின் முன்னோட்டக் காட்சி பார்த்த அனைவரும் பாராட்டிக் கொண்டே இருக்கிறார்களாம்!</p>
<p>விமர்சனத்தை நாளை எதிர்பாருங்கள்!</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://pirapalam.com/cinema/3869.html/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>சினேகா &#8211; பிரசன்னாவுக்கு ரஜினி தந்த திருமணப் பரிசு!</title>
		<link>http://pirapalam.com/cinema/3866.html</link>
		<comments>http://pirapalam.com/cinema/3866.html#comments</comments>
		<pubDate>Thu, 17 May 2012 13:05:57 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://pirapalam.com/?p=3866</guid>
		<description><![CDATA[புதுமணத் தம்பதிகள் சினேகா &#8211; பிரசன்னாவை தன் வீட்டுக்கே வரவழைத்து திருமணப் பரிசு வழங்கினார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
கடந்த மே 11-ம் தேதி நடந்த தங்கள் திருமணத்துக்கு வருமாக சூப்பர் ஸ்டாருக்கு அழைப்பிதழ் கொடுத்திருந்தனர் சினேகாவும் பிரசன்னாவும். ஆனால் ரஜினியால் இந்த திருமணம் அல்லது அதன் பிறகு திரையுலகினருக்காக&#8230;]]></description>
			<content:encoded><![CDATA[<p>புதுமணத் தம்பதிகள் சினேகா &#8211; பிரசன்னாவை தன் வீட்டுக்கே வரவழைத்து திருமணப் பரிசு வழங்கினார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.<span id="more-3866"></span></p>
<p>கடந்த மே 11-ம் தேதி நடந்த தங்கள் திருமணத்துக்கு வருமாக சூப்பர் ஸ்டாருக்கு அழைப்பிதழ் கொடுத்திருந்தனர் சினேகாவும் பிரசன்னாவும். ஆனால் ரஜினியால் இந்த திருமணம் அல்லது அதன் பிறகு திரையுலகினருக்காக நடத்தப்பட்ட பிரத்தியேக வரவேற்பில் பங்கேற்க முடியவில்லை. கோச்சடையான் பணிகளில் அவர் பிஸியாக இருந்தார்.</p>
<p>இந்த நிலையில் சினேகாவையும் பிரசன்னாவையும் தன் வீட்டுக்கே வரவழைத்து அவர்களுக்கு திருமணப் பரிசு வழங்கி, இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.</p>
<p>ஸ்ரீராகவேந்திரர் உருவப்படத்தின் ஆயில் பெயின்டிங்கை இருவருக்கும் அன்புப் பரிசாக அளித்த ரஜினி, இருவருக்கும் திருமண வாழ்த்து கூறியுள்ளார்.</p>
<p>இதுகுறித்து பிரசன்னா கூறுகையில், &#8220;இந்த நாள் எங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாதது. சூப்பர் ஸ்டாரின் அன்புப் பரிசோடு வாழ்க்கையைத் தொடங்குகிறோம்,&#8221; என்றார்.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://pirapalam.com/cinema/3866.html/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>துப்பாக்கியில் நான் நடிக்கவே இல்லை! &#8211; சரத் மறுப்பு</title>
		<link>http://pirapalam.com/cinema/3863.html</link>
		<comments>http://pirapalam.com/cinema/3863.html#comments</comments>
		<pubDate>Thu, 17 May 2012 13:03:58 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
				<category><![CDATA[நடிகர்]]></category>

		<guid isPermaLink="false">http://pirapalam.com/?p=3863</guid>
		<description><![CDATA[நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் துப்பாக்கியில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார், அதை விஜய்யே இயக்குகிறார் என்கிற ரேஞ்சுக்கு செய்திகள் வெளியாகி வருகின்றன கடந்த சில தினங்களாக.
ஆனால் இதெல்லாம், பத்திரிகை / இணையதளங்களைப் பார்த்துதான் தானே தெரிந்து கொண்டதாகக் கூறியுள்ளார் சம்பந்தப்பட்ட நடிகரான சரத்குமார்.
இதுகுறித்து சரத்குமார் கூறுகையில், &#8220;எனது அமெரிக்கப்&#8230;]]></description>
			<content:encoded><![CDATA[<p>நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் துப்பாக்கியில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார், அதை விஜய்யே இயக்குகிறார் என்கிற ரேஞ்சுக்கு செய்திகள் வெளியாகி வருகின்றன கடந்த சில தினங்களாக.<span id="more-3863"></span></p>
<p>ஆனால் இதெல்லாம், பத்திரிகை / இணையதளங்களைப் பார்த்துதான் தானே தெரிந்து கொண்டதாகக் கூறியுள்ளார் சம்பந்தப்பட்ட நடிகரான சரத்குமார்.</p>
<p>இதுகுறித்து சரத்குமார் கூறுகையில், &#8220;எனது அமெரிக்கப் பயணத்தை முடித்துக் கொண்டு இப்போதுதான் சென்னை திரும்பினேன். உடனே ஏகப்பட்ட போன்கால்கள், துப்பாக்கியில் நடிப்பது குறித்து.</p>
<p>கடந்த சில தினங்களாக வெளியான செய்திகளைப் பார்த்துதான் துப்பாக்கியில் நான் முக்கிய வேடத்தில் நடிப்பதே தெரிந்தது! இதில் எந்த உண்மையும் இல்லை. தவறான செய்தி. குறைந்தபட்சம் விசாரிக்காமல் கூட வெளியிட்டுவிடுவதா?</p>
<p>மல்டி ஹீரோ சப்ஜெக்டில் நடிப்பதை நான் வரவேற்கிறேன். ஆனால் இன்றைய தேதிக்கு தமிழில் ரஜினி சாருடன் கோச்சடையான், மலையாளத்தில் சில படங்கள், கன்னடத்தில் படங்கள் என நான் ரொம்ப பிஸி. விரைவில் சினேகாவும் நானும் நடித்த விடியல் படம் வெளியாகவிருக்கிறது,&#8221; என்றார்.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://pirapalam.com/cinema/3863.html/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
	</channel>
</rss>

