96 கதை திருட்டு சர்ச்சை - பாரதிராஜா எழுதியுள்ள கடிதத்தால் பரபரப்பு

விஜய் நடித்து கடந்த வாரம் தீபாவளிக்கு ரிலீஸான படம் சர்கார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான இப்படம் ஒரு கட்டத்தில் திருட்டு கதை விவகாரத்தில் சிக்கி தவித்தது.

Nov 13, 2018 - 04:38
 0
96 கதை திருட்டு சர்ச்சை - பாரதிராஜா எழுதியுள்ள கடிதத்தால் பரபரப்பு
96

விஜய் நடித்து கடந்த வாரம் தீபாவளிக்கு ரிலீஸான படம் சர்கார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான இப்படம் ஒரு கட்டத்தில் திருட்டு கதை விவகாரத்தில் சிக்கி தவித்தது.

தற்போது அதேபோன்ற சூழ்நிலை தான் விஜய்சேதுபதி, திரிஷா நடித்து அறிமுக இயக்குனர் பிரேம் குமார் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான 96 படத்திற்கும் ஏற்பட்டுள்ளது.

முதலில் சர்கார் படத்தை போலவே சிறியதாக ஆரம்பித்த இப்பிரச்சனை தற்போது தயாரிப்பாளர் சங்கம் வரை சென்றுள்ளது. பாரதி ராஜா அலுவலகத்தில், இந்த 96 படம் தன்னுடைய 92 படத்தின் கதை என கூறும் பாரதிராஜாவின் உதவியாளர் சுரேஷும் பாரதிராஜாவும் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர். அப்போது பாரதி ராஜா தயாரிப்பாளர் சங்கத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளதாக கூறியுள்ளார்.

அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது,

கடந்த 2012 டிசம்பரில் எனது உதவி இயக்குநர் சுரேஷ் சத்ரியன் சென்னையில் உள்ள எனது அலுவலகத்தில் ‘92’ என்ற தலைப்பில் கூற்ய கதையைக் கேட்டு வியந்து, பாராட்டி உடனே அதை கொடைக்கானல் அடிவாரத்தில் உள்ள எனது தோட்டத்தில் ஒரு மாதத்திற்கும் மேலாக விவாதித்து, ‘பால்பாண்டி என்கிற பாரதி’ அல்லது ‘நீ, நான், மழை, இளையராஜா’ என்கிற தலைப்புகளில் அக்கதையை இயக்குவதாக முடிவு செய்திருந்தேன். ஆனால், தவிர்க்கமுடியாத காரணங்களால் ‘ஓம்’ படம் துவக்கப்பட, அதனுடைய வெளிநாட்டு படப்பிடிப்புகள் மற்றும் அதை சார்ந்த வேலைகளால் இந்த படத்தின் வேலைகள் சற்று தள்ளிப்போனது.

எனவே, அந்த காலகட்டத்திலேயே எனது ஆலோசனைப்படி மற்ற நடிகர், நடிகையர் மற்றும் தயாரிப்பாளர்களிடம் இக்கதை தொடர்பாக அணுகுமாறு கூறியிருந்தேன். அவரும் முயற்சி எடுத்தார்.

இது இவ்வாறு இருக்கையில் தற்போது வெளிவந்துள்ள ‘96’ எனும் படம் MADRAS ENTERPRISES என்ற தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் ’திரு.நந்தகோபால்’ அவர்களால் தயாரிக்கப்பட்டு திரு.சி. பிரேம்குமார் அவர்களால் இயக்கப்பட்டு, திரு.விஜய்சேதுபதி மற்றும் த்ரிஷா நடிப்பில் வெளிவந்து ஓடிக் கொண்டிருக்கும் அப்படத்தை 11-10-2018 அன்று எனக்கு திரையிட்டுக்காட்டினார்கள். இத்திரைப்படம் தொடக்கம் முதலே எனது உதவியாளர் கூறிய கதையின் முழுப்பிரதியாக இருந்ததை கண்டு மிகவும் அதிர்ச்சியடைந்தேன். என் உதவி இயக்குநர் மனமுடைந்து மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.

இது வேதனைக்கும், மன உளைச்சலுக்குமானது மட்டுமல்ல, தடுத்து நிறுத்தப்பட வேண்டியது மற்றும் தீர்வு காணப்பட வேண்டியது என்பதை உணர்ந்து இப்படத்தின் தயாரிப்பாளர் நந்தகோபால் அவர்களை 12-10-2018 அன்று அழைத்து பேசினேன். எவ்வித முடிவு எட்டப்படாததால், தற்போது தயாரிப்பாளர் சங்கத்தை நாடியுள்ளேன்.

மேலும் ‘அசுரவதம்’ படத்தின் இயக்குநர் மருதுபாண்டியனை 2014 வருட இறுதியில் நண்பர் என்ற முறையில் அழைத்து தன்னுடைய கதையை சுரேஷ் விவாதித்துள்ளார். மருதுபாண்டியன் ‘96’ படத்தில் நடித்தது மட்டுமில்லாமல் அக்கதையின் கதை விவாதத்திலும் தொடக்கம் முதலே பங்கெடுத்துள்ளார். மருதுபாண்டியனை விசாரித்தபொழுது 2014-ல் எனது உதவியாளர் கதை கூறியதை ஒப்புக் கொண்டார். இதன்மூலம் எனது உதவியாளரின் கதை எவ்வாறு ‘96’ ஆனது என்பது வெளிப்படையாக தெரியவந்துள்ளது என்றார்.

மேலும் இந்த விஷயத்தில் பாரதிராஜா நேரடியாக தலையிட்டுள்ளதால் பிரச்சனை பெரிதாகும் என்றே தெரிகிறது.

like

dislike

love

funny

angry

sad

wow

Pirapalam Tamil Cinema Editor