ஷங்கர்-விஜய் படம் உறுதியா?
தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர். இவரது படங்களின் கதை சமூகத்திற்கு முக்கியமான விஷயத்தை கூறுவதாக இருக்கும், அதோடு தொழில்நுட்பமும் ரசிகர்கள் வியந்து பார்க்கும் வண்ணம் இருக்கும்.
தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர். இவரது படங்களின் கதை சமூகத்திற்கு முக்கியமான விஷயத்தை கூறுவதாக இருக்கும், அதோடு தொழில்நுட்பமும் ரசிகர்கள் வியந்து பார்க்கும் வண்ணம் இருக்கும்.
இவரது இயக்கத்தில் கடைசியாக ரஜினியின் 2.0 படம் வெளியானது.
அண்மையில் சியான் விக்ரம் ஒரு பேட்டியில், ஷங்கருடன் மீண்டும் பணிபுரிய நான் தயாராக இருக்கிறேன், இப்போது தான் ரஜினி அவர்களுடன் படம் முடித்தார், அடுத்து அவர் விஜய்யுடன் படம் பண்ணலாம் இல்லை வேறு யாருடனாவது படம் இயக்கலாம்.
அதன்பிறகு அவர் என்னுடைய படம் இயக்கலாம் என பேசியுள்ளார்.
ஏற்கெனவே விஜய்-ஷங்கர் படம் பற்றி தகவல்கள் வந்துகொண்டிருந்த நிலையில் விக்ரமும் இப்படி பேசியிருப்பது படம் உறுதி தானோ என ரசிகர்கள் நினைக்க ஆரம்பித்துவிட்டனர்.