வெற்றிமாறன்-சூரி கூட்டணியில் உருவாகும் திரைப்படத்தின் கதை மாற்றம்!
இயக்குனர் வெற்றி மாறன் தமிழ் சினிமாவிற்கு பல சிறந்த திரைப்படங்களை கொடுத்துள்ளார். இவர் இயக்கத்தில் வெளியான வடசென்னை மற்றும் அசுரன் திரைப்படம் மிக பெரிய வெற்றியடைந்தது.
இயக்குனர் வெற்றி மாறன் தமிழ் சினிமாவிற்கு பல சிறந்த திரைப்படங்களை கொடுத்துள்ளார். இவர் இயக்கத்தில் வெளியான வடசென்னை மற்றும் அசுரன் திரைப்படம் மிக பெரிய வெற்றியடைந்தது.
அதனை தொடர்ந்து இவர் நடிகர் சூரியை வைத்து ஒரு படம் இயக்கப்போவதாவும், அதன்பின் நடிகர் சூர்யாவை வைத்து வாடிவாசல் எனும் நாவலை தழுவி திரைப்படத்தை இயக்குவுள்ளதாகவும் தகவல் வெளியானது.
மேலும், இவர் சூரியை வைத்து இயக்கவிருந்த திரைப்படம், நா.முத்துக்குமாரின் பட்டாம்பூச்சி விற்பவன் என்ற புத்தகத்தை தழுவி படமாக இருந்தனர்.
அதன்பின் மீரான் மொய்தீனின் அஜூனபி நாவலை தேர்தெடுத்தனர், அதில் ஒம்மன், கத்தார், சவூதி அரேபிய உள்ளிட்ட நாடுகளில் படமாக இருந்தனர். ஆனால், கொரோனா வைரஸ் காரணமாக விமானங்களில் செல்ல தடைவிதிக்க பட்டுள்ளதால்.
தற்போது இந்த கதையையும் மாற்றி புதிதாக ஒரு கதையில் நடிகர் சூரி நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.