விஜய்யை தொடர்ந்து முன்னணி நடிகரின் படத்தில் மாளவிகா மோகனன்!
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளிவந்த பேட்ட படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். இப்படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார் என்பதை நாம் அறிவோம்.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளிவந்த பேட்ட படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். இப்படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார் என்பதை நாம் அறிவோம்.
இவர் இதற்கு முன்பு மலையாளத்தில் பல படங்களில் நடித்துள்ளார். மேலும் துல்கர் சல்மான் மற்றும் மம்மூட்டி போன்ற முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன்பின், தளபதி விஜய்க்கு ஜோடியாக லோகேஷ் கனகராஜ் இயக்கி முடித்துள்ள மாஸ்டர் படத்தில் நடித்து முடித்துள்ளார் மாளவிகா.
இதனை தொடர்ந்து ஹரி சூர்யா இணையும் அருவா படத்தில் இவர் தான் கதாநாயகி என்றும் சில தகவல்கள் சமூக வலைத்தளங்களில் கசிந்து வெளிவந்தது.
இந்நிலையில் தற்போது ரஜினி மற்றும் விஜய்யை தொடர்ந்து ஹிந்தியில் ஒரு படத்தில் இவர் கமிட்டாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இப்படத்தில் பிரபல நடிகர் பர்கான் அக்தாருடன் இணைந்து நடிக்க போவதாக தெரியவந்துள்ளது.